Menu
Your Cart

கருநாகபுர கிராமம் | சிவப்பின் நிறம் கருப்பு (2 நாவல்கள்)

கருநாகபுர கிராமம் | சிவப்பின் நிறம் கருப்பு (2 நாவல்கள்)
கருநாகபுர கிராமம் | சிவப்பின் நிறம் கருப்பு (2 நாவல்கள்)
-5 %
கருநாகபுர கிராமம் | சிவப்பின் நிறம் கருப்பு (2 நாவல்கள்)
கருநாகபுர கிராமம் | சிவப்பின் நிறம் கருப்பு (2 நாவல்கள்)
கருநாகபுர கிராமம் | சிவப்பின் நிறம் கருப்பு (2 நாவல்கள்)
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கருநாகபுர கிராமம்: கருநாகபுர கிராமத்தில் அடுக்கடுக்கான மரணங்கள்.. அதுவும் மர்மமான முறையில். காரணம் அறியாமல் கைவிடப்படுகிறது அந்த வழக்கு. இதற்குமுன், அந்த வழக்கை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரிகள் உயிருடன் திரும்பியதில்லை என்ற அபாயம் அறிந்தே கருநாகபுர கிராமத்திற்கு செல்கிறார் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர், சந்தோஷ். விசாரணை ஆரம்பித்த சில மணிநேரத்திலேயே சந்தோஷூக்கு அமானுஷ்யமான, ஆச்சரியமான நிகழ்வுகள் மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் நடக்கின்றன. கருநாக சித்தரின் சாபம், கலியுகன் மற்றும் கலியுகம் பற்றிய கதைகள் என அவர் கேள்விபடும் விஷயங்கள் எல்லாமே, மேலும் மேலும் விசாரணையின் கோணத்தை திசை மாறச் செய்கிறது.இவற்றையெல்லாம் நம்பலாமா இல்லை நம்பக்கூடாதா என தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் உண்மைதன்மை அறிய போராடுகிறார். அந்த போராட்டம், அதன் விளைவுகள், உங்களை திடுக்கிட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிவப்பின் நிறம் கருப்பு: நெடுஞ்சாலையில் சாலை விபத்தால் காயமடைந்த நபரைப் பற்றி போலீஸ்க்கு தெரிவிக்கிறாள், துணிச்சல் மிகுந்த இளம் பெண்டாக்டர் அருணா. ஆனால், அதுவே பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டாள். விபத்தில் சிக்கிய நபருக்கும் அருணாவுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் முதற்கட்ட விசாரணையில் கிடைக்கின்றன. அதை மறுக்கிறாள் அருணா. ஆனால், காவல்துறை அதிகாரிகளின் விசாரணை அவளை நோக்கி பாய்கிறது. அதே நேரத்தில்,வித்தியாசமான முறையில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அது காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைகிறது. அதன் ஆதியும் அந்தமும் புரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்கிறார்கள். குற்றவாளி யார் என அறியும்போது நீங்கள் அதிர்ச்சியில் மீள சிலமணிநேரம் ஆகலாம்.
Book Details
Book Title கருநாகபுர கிராமம் | சிவப்பின் நிறம் கருப்பு (2 நாவல்கள்) (karunagapura-graamam-sivappin-niram-karuppu)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher ஆர்.கே.பப்ளிஷிங் (RK Publishing)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பதவி மோக விளையாட்டு அதிக உயிர்பலிகளை வாங்கும். முதலமைச்சரை கொன்றுவிட்டு தான் அந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் அமைச்சர் பார்த்திபராஜன் போட்ட திட்டம் வெளியில் கசிந்து விடத் தொடர் கொலைகள் விழுகிறது.அமைச்சரின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுவதாகப் பிம்பத்தை உண்டாக்கி விவேக் தகுந்த ஆதாரத்துடன் அவர் மகனுட..
₹43 ₹45
சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..
₹27 ₹28
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹143 ₹150
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹114 ₹120